அறிமுகம்
வணக்கம் நண்பர்களே
என் பெயர் குருஸ்
ஈரோட்டில் உள்ள பவானி எனும் ஊர் தான் என் சொந்த ஊர். எங்கள் ஊர் கார்பெட் சிட்டி என்னும் பெயரிலும் ஆழைக்கப்படுகிறது. ஆமாங்க ஜமக்காளம் இங்க தான் தயாரிக்கப்படுகிறது அது தான் பவானி ஜமக்காளம் எனும் பெயரே இருக்கிறது நம்ம ஊர்ல கூடுதுறை ஆலயம் மிகவும் பிரபலம் மூன்று நதி சேரும் இடம் என்பதால் இது ஒரு ஹாட்ஸ்பாட் என்ற சொல்லலாம். மூன்று நதினா காவேரி இல்லாமையா. அப்புறம் நம்ம ஊர்ல காலிங்கராயன் வாய்க்கால் இருக்குதுங்க மிக நீண்ட வாய்க்கால் கரூர் கொடுமுடிகலாம் இங்க இருந்துதான் வாட்டர் சப்ளை ஆகுது.
இலக்கியத்தின் மீது உள்ள ஆர்வம் தான் இந்த பக்கம் உருவாக காரணம். நான் வாசித்த மற்றும் தெரிந்த கதைகள், நாவல்கள், விஷயத்தை பற்றி இங்கே பதிவு ஏற்றஉள்ளளேன். இங்கே வெறும் இலக்கியம் மட்டும் இல்லாமல் சினிமா ஆதாவது எனக்கு நெருக்கமான அல்லது என்னை பாதித்த படம் பற்றியும் என்பார்வையில் பதிவு செய்ய உள்ளேன். உங்களுக்கு பிடித்த பதிவை பற்றி மறக்காமல் கமெண்ட் பாஸ்ல் கருத்துக்களை பதிவிடுகள்.
நன்றி
இப்படிக்கு
உங்கள் நண்பன்
குருஸ்

