சொனாட்டா
எப்போதும் புதிய எழுத்தாளர்களைப் படிக்கும் போது ஒரு பயம் ஏற்படும். அது படைப்பை மதிப்பீடு செய்ய காரணமாகவும், அவரின் அடுத்த படைப்பிற்கு நம்மை அழைத்து செல்ல அஸ்திவாரமாகவும் அமையும். சரவணன் சந்திரனின் பரிந்துரை ப் பெயரில் தான் பாலுவின் சொனாட்டா அறிமுகம். சொன்னட்டா பாலுவின் முதல் நாவல் பரவலாக பேசப்பட்டதும் விமரிசிக்க பட்டதும் கூட . இளம் எழுத்தாளர்கள் தங்கள் முதல் கதையை மிகவும் கவனமாக கையாளுவார்கள் . ஆனால் பாலு மட்டும் இதில் சற்று விலகி நிற்கிறார் .Pronography பற்றியான கதையை தன் முதல் நாவலாக வடிமைப்பதற்கு தைரியம் வேண்டும் . ப்ரோனோக்ராபி (Pronograghy) களம் என்பது ஒரு மெல்லிய கோடு சற்று மிகையானாலும் நோக்கமே மாறிவிடும் . அதை இலக்கிய தன்மையோடு ரொம்பவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் பாலு அதற்கு என் பாராட்டுக்கள் . யாருக்கு ஆனா நாவல் என்றால் இளைஞர்களுக்கு குறிப்பாக இந்த தலைமுறைக்கும் மற்றும் வரும் தலைமுறைக்கும் ஆனது . ருத்ர மற்றும் ஆரோக்கிய தாஸ் என இரு கதை பாத்திரைத்தைக் கொண்டு இரண்டு சரடுகளாக கதை பிரிகிறது ...

