தொலைந்து போனவர்கள்
தவிர்க்க முடியாத தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பட்டிய ல் எடுத்தால் அதில் சா . கந்தசாமி கட்டாயம் இடம்பெறுவார் . அதற்கு சாயாவனம் ஒரு சான்று அதை படித்த பின் யாரும் காடுகளை வெறும் காடு என்று எளிதாக கடந்து விடமுடியாது . உணர்ச்சி எழுப்பும் வகையில் எழுதிய மற்றொரு குறுநாவல் தான் தொலைந்து போனவர்கள் . பால் யக காலத்தில் நண்பர்களான சங்கர் , வேணு , ராமசாமி , தாமோதரன் ஆகிய நால்வரின் கதை. கால ஓட்டத்தில் காரணமாக அனைவரும் வெவ்வேறு இடத்தில் புலம் பெயர்கிறார்கள். முப்பது வருடம் கழித்து தாமோதரன் ஒரு போராட்ட கூட்டத்தில் தன் நண்பனான சங்கரை காண நேர்கிறது . பின்பு அவ ன் முலமாக பாக்கி இருக்கும் இருவரையும் தேடி செல்கிறான் . துப்பறியும் நாவல் போல் தான் கதையின் தொடக்கம் அதற்கு ஏற்றாறு போல் சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பாக செல்கிறது . எந்த அலங்காரம் இல்லாமல் யதார்த்தமான எளிய நடையில் வடிமைத்து உள்ளார் . வாழ்க்கை பல ஆச்சரியங் களை ஒளித்து வைத்துள்ளது . சிறு வயதில் நாம் எப்படி இருந்த...




